தமிழகத்தில் ஆண், பெண்களுக்கு நிகரான பல்வேறு சலுகைகளை மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூன்றாம் பாலினத்தவருக்கு நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் பொதுநல மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த புகார் மனுவுக்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர்கள், “மூன்றாம் பாலினத்தவருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க மாவட்ட அளவில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இது தவிர கல்வி, சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.” என தெரிவித்து இருந்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கை பைசல் செய்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
அடேங்கப்பா.., 9 வாரத்துக்கு இத்தனை லட்சமா?? ஜோவிகாவுக்கு பிக்பாஸ் கொடுத்த சம்பளம்!!!