தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…, இந்த தேதியில் இத மிஸ் பண்ணிடாதீங்க!!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..
இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டை வைத்துள்ள ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் தொடங்கி உள்ள நிலையில், மக்கள் அனைவரது எதிர்பார்ப்பும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தான். ஜனவரி மாதம் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் பரிசு தொகுப்பு குறித்து இதுவரையிலும் எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், அரசு தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, வரும் டிசம்பர் 9ம் தேதி தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் ரேஷன் கடைகளுக்கு நேரில் வர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்றுகளும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here