தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் சமீபகாலமாக வெயிலில் வாடி வந்த பலருக்கும் இந்த மழைப்பொழிவு வெப்பத்தை தணித்து குளிர்ச்சியைத் தருகிறது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 29) அடுத்த 3 மணி நேரத்தில் மழைப்பொழிவு இருக்கக்கூடிய மாவட்டங்களை வானிலை மையம் அறிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி தமிழகத்தில் தென் மாவட்டங்களான தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிவு: ஒரு வாரத்திற்கு பிறகு மவுனம் கலைத்த அண்ணாமலை.,