புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகிற 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.
வெளியான உத்தரவு:
தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள், தலைவர் பிறந்த தினங்கள் அல்லது கோயில் திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகள் காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசி கொடை திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றுதல், பூப்பல்லாக்கு மற்றும் தேரோட்டம் போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்த நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு வருகிற மார்ச் 13ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.
#HBD MK Stalin : சினிமா முதல் சிம்மாசனம் வரை! முதல்வரின் 70 ஆண்டு பயணம் இதோ!!
இந்த விடுமுறையை ஈடுகட்டும் பொருட்டு ஏப்ரல் 1ம் தேதி பணி நாளாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாள் பொதுத்தேர்வு இருந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் உத்தர விடப்பட்டுள்ளது.