நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தை தொடர்ந்து ஜூலை 1 முதல் அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த சூழலில் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவதற்கான ஒப்புதலை நிதித்துறை வழங்கவில்லை என போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி தெரிவித்துள்ளார். இதையடுத்து அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 16 சங்கங்கள் ஒன்றிணைந்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமிழக மக்களே உஷார்.., இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்.., வானிலை மையம் பகீர் அறிவிப்பு!!!