தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த கனமழை பெய்ய கூடும். மேலும் ராணிப்பேட்டை, வேலூர், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை., போக்குவரத்து துறை செயலர் அறிவிப்பு!!!