சென்னையில் ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு தடை…, தமிழக போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை!!

0
சென்னையில் ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு தடை..., தமிழக போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை!!

சென்னை மாநகரில் போக்குவரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலை போக்குவரத்துக்கு சேவையை எளிமையாக்க, கிளாம்பாக்கத்தில் பலவித வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையத்தை சமீபத்தில் தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இந்நிலையில், தமிழக போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, சென்னை நகருக்குள் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது இன்று (ஜனவரி 24) இரவிலிருந்து அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை நகருக்குள் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என்றும் கோயம்பேட்டிலிருந்து வடக்கு, மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை வழக்கம் போல இயக்கலாம் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அயோத்தியில் எழுப்ப இருக்கும் புதிய மசூதி., கட்டுமான பணி குறித்து வெளியான முக்கிய அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here