தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்? அறிக்கை தாக்கல் செய்ய துறை செயலாளர்களுக்கு உத்தரவு!!

0
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம்? அறிக்கை தாக்கல் செய்ய துறை செயலாளர்களுக்கு உத்தரவு!!

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து துறை செயலாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு உத்தரவு:

இந்தியா முழுவதும் தற்போது அமலில் இருக்கும், பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என, ஊழியர்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை கவனத்தில் கொண்ட பல மாநில அரசுகள், மீண்டும் இத்திட்டத்தை அமல்படுத்தி விட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில், கடந்த 20 மாதங்களாக தமிழக அரசு இதில் மௌனம் சாதித்து வருவதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, விரிவான அறிக்கையை தாக்கல் செய்து அனுப்புமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களே கவனம்., இந்த மாசம் இத்தனை லீவா? மார்ச் மாத காலண்டர் வெளியீடு!!

இதுபோக, பங்களிப்பு பென்ஷன் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களையும், அனுப்பி வைக்க வேண்டும் என அரசு நிதி துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் விரைவில் இத்திட்டம் அமலாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here