தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் ரூ.1,000 உரிமை தொகை பெற பலரும் விண்ணப்பித்ததில், 1.065 கோடி குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கியதால், இதுவரை 9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கலைஞர் திட்டத்திற்காக புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இதனால் பலரும் இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக கூறி வருகின்றனர். இதையடுத்து ரேஷன் கார்டு தொடர்பாக விடுபட்ட பணிகளை மீண்டும் செயல்படுத்தவும், அவர்களுக்கும் கலைஞர் உரிமை தொகை திட்ட பலன்களை பெறும் வகையில் வாய்ப்பு ஏற்படுத்தவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்கள் நாளை போராட்டம்? அமைச்சர் அன்பில் மகேஷ் விடுத்த வேண்டுகோள்!!!