தமிழகத்தில் சாலை போக்குவரத்து சேவை எளிமையாக்குவதற்காக மெட்ரோ ரயில் சேவையை அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது, சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, அடுத்ததாக மதுரை மற்றும் கோயம்புத்தூரிலும் செயற்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளான டிசம்பர் 3ம் தேதி ரூ.5 கட்டணத்தில் மக்கள் பயணிக்கலாம் என அறிவித்திருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 3ம் தேதி அதிக மக்கள் பயணம் செய்யாததால் வரும் டிசம்பர் 17ம் தேதி ரூ.5 கட்டணத்தில் பொது மக்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.