தமிழகத்தில் 5,446 பணியிடங்களுக்கான “குரூப் 2” தேர்வு அறிவிப்பை கடந்தாண்டு TNPSC தேர்வாணையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து முதல் நிலை தேர்வு முடிந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இதில் 55,071 தேர்வர்கள் கலந்து கொண்ட நிலையில், இதுவரையிலும் முடிவுகள் வெளிவராமல் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என TNPSC தேர்வாணையம் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இன்று (டிச.15) மாலைக்குள் மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் தேர்வர்கள் அனைவரும் TNPSC யின் அதிகாரபூர்வ தளத்தில் முடிவுகளை எதிர்நோக்கி மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.