தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் – இன்று முதல் அமல்!!

0

தமிழகத்தில் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கை செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உத்தரவிட்டார்.

இதனால் இன்று (23 ஆகஸ்ட் 2021) முதல் தமிழ் நாட்டில் திரையரங்குகள் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் அரசு அறிவித்த கோவிட்19 வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரையில் பொதுமக்கள் இனி அனுமதிக்கப்படுவார்கள்.

chennai peoples

இது தவிர நீச்சல் பயிற்சிகளுக்காக மட்டும் 50 விழுக்காடு பயிற்சியாளர்களுடன் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதோடு தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவிற்கு பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளா மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதால் அந்த மாநிலத்துக்கான பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here