தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு, வருகிற டிசம்பர் 3ம் தேதி முழு உள்ளூர் விடுமுறை அளிப்பதாக, மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிரடி அறிவிப்பு :
தமிழகத்தில், முக்கிய தினங்களில் அரசின் சார்பாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், முக்கிய தலைவர் தினங்கள், கோவில் திருவிழாக்கள் மற்றும் வெள்ளம் போன்ற காலங்களில் இந்த விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் ஒரு சில மாவட்டங்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் டிஜிட்டல் கரன்சி., டிசம்பர் 1 முதல் அமல்., ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!
கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்ட, அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.