நாடு முழுவதும், டிஜிட்டல் கரன்சியை வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு :
மத்திய அரசு, காகிதம் இல்லா பணப்பரி மாற்றத்திற்கான முக்கிய வழியாக டிஜிட்டல் கரன்சி குறித்த திட்டத்தை, சமீபத்தில் கொண்டு வந்தது. விரைவில் இந்த டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டுக்கு வரும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மத்திய பட்ஜெட்டின் போது அறிவித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் வருகிற டிசம்பர் 1ஆம் தேதி, டிஜிட்டல் கரன்சி வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிஜிட்டல் கரன்சி என்பது காகிதம் இல்லா பணப்பரிமாற்றத்திற்கான ஒரு வழியாகவும், பொருளாதார முன்னேற்றத்திற்கான அடுத்த அடியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
பள்ளியில் நடக்கும் பாலியல் தொடர்பாக நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை.., முழுவிவரம் உள்ளே!!
முதல் கட்டமாக இந்த டிஜிட்டல் கரன்சி எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, எஸ் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் என்ற 4 வங்கிகளில் பயன்பாட்டுக்கு வருவதாகவும், விரைவில் இந்தியா முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு, பொருளாதார வல்லுநர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.