பொதுமக்கள் அனைவரும் தங்களது ஊர்களில் கொண்டாடப்படும் பண்டிகை காலங்களை சிறப்பாக கொண்டாடுவதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் நிலைக்கேற்ப விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில், நாளை (பிப்ரவரி 1) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதனால், இக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர் கூட்டம் அலை மோதும் என்பதாலும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் அப்பகுதியில் உள்ள 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் விவரம்:
- அரசு கா.மு.சுப்பராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
- அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம்,
- எஸ்.எஸ்.கே.வி.பள்ளி,
- ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
- ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
- சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி மற்றும்
- எஸ்.எஸ்.கே.வி.பள்ளி நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரு பள்ளிகள்,
- ஒ.பி.குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும்
- தி/ள் அந்திரசன் பள்ளி,
- தி/ள் பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி,
- தி/ள் அரசு கா.மு.சுப்பராய முதலியார் தொடக்கப்பள்ளி
Enewz Tamil WhatsApp Channel
பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் ஆசை இதுதான்.. வாழ்த்தும் ரசிகர்கள்!!!