பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஜனவரி 14ம் தேதியுடன் பிரம்மாண்டமாக நிறைவடைந்தது. இதில் ஒயில்டு கார்டு போட்டியாளராக சென்ற அர்ச்சனா டைட்டிலை வென்று அசத்தினார். இதன் மூலம் பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் கோப்பையை வென்ற முதல் வைல்ட் கார்டு போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார்.
இவருக்கு ரசிகர்கள் ஆதரவு இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல் எதிர்ப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து அர்ச்சனா PR டீம் மூலமாக தான் வெற்றி பெற்றார் என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இதே கேள்வியை தனியார் பேட்டியில் கேட்ட பொழுது அதற்கு அர்ச்சனா, எனக்கு 19 கோடி ஓட்டு வந்துள்ளது, அதில் ஒரு கோடி ஓட்டை நான் காசு கொடுத்து வாங்கினேன் என்று வைத்துக் கொள்வோம், ஒரு ஓட்டுக்கு 1 ரூபாய் கொடுத்தால் கூட ரூபாய் ஒரு கோடி செலவு எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரூபாய் 50 லட்சம் பரிசுத் தொகையை வெள்ள ரூபாய் 1 கோடி செலவு செய்வதற்கு பதில் நான் ஒரு சிறு பட்ஜெட் படத்தை எடுத்து அதில் ஹீரோயினாக நடித்து விடுவேன் என தெரிவித்திருந்தார். இதை வைத்து பார்க்கும் பொழுது அவரின் ஆசை படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதுதான் என தெரியவந்துள்ளது. எனவே விரைவில் அவரின் ஆசை நிறைவேற வேண்டும் என ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.