தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு விரைவில் துவங்க உள்ள நிலையில், கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தேர்வுகள் இயக்ககம்:
தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள், கடந்த வாரம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, இவர்களுக்கான பொதுத் தேர்வு இம்மாதம் 13 மற்றும் 14ம் தேதிகளில் தொடங்க உள்ளது. இதற்கான இறுதி கட்டப் பணிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக செய்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனைத் தொடர்ந்து, இந்த தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர் பணி என்பது அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இதனால் பல மாவட்டங்களில், இந்த பொறுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது.
தமிழக மாணவர்கள், இளைஞர்கள் whatsapp குழுக்களுக்கு கெடுபிடி., இத செஞ்சா ஜெயில் கன்பார்ம்!!
இதை கவனத்தில் கொண்டு, முதன்மை கண்காணிப்பாளர் பணியை மூத்த முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் பணி மூப்பில் முன்னிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும் வழங்கலாம் என தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. எனவே இது சார்ந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.