தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் 30 ஆம் தேதிக்குள் கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விதிமுறை ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் மாணவர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு இந்த விதிமுறையை பள்ளிக்கல்வித்துறை மாற்றி அமைந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் புதிதாக பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
பூர்ணிமா காதுல பூவை வச்ச ஆண்டவர்.., ஸ்தம்பித்து போன போட்டியாளர்கள் – பரபரப்பாக வெளியான ப்ரோமோ!!