தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,300 செவிலியர் பணியிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் நிரப்பப்பட உள்ளதாக அண்மைக்காலமாக தெரிவித்து வந்தனர். இருந்தாலும் இதுவரையிலும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் சிரமப்பட்டு வருவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப செவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட உள்ளது. அதன்படி அடுத்த வாரம் 800 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளது.” என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பலர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.