தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராமேஸ்வர மீனவர்கள் உட்பட 28 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதோடு அவர்களின் மீன் வலைகள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்டவையுடன் மீன்பிடி படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வர மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக திட்டமிட்டு வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, கைது செய்த மீனவர்களையும், கைப்பற்றிய மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
குழந்தை விற்க பேரம் பேசிய பெண் அரசு மருத்துவர்.., அமைச்சர் மா. சுப்பிரமணியன் எடுத்த அதிரடி முடிவு!!