
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் வேலை காரணமாக தங்கி இருப்பவர்கள் பலரும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று வர ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. இதற்கான முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும், டிக்கெட் கவுண்டர் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக பள்ளி மாணவர்களே…, தீபாவளிக்கு உங்களுக்கான சூப்பர் நியூஸ்…, வெளியான முக்கிய தகவல்!!
அதன்படி இதுவரை தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 1.20 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னையில் மட்டுமே 75,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இனி நாளை (நவ.9) மற்றும் நாளை மறுநாள் (நவ.10) என நடப்பாண்டில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் 5.90 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.