தமிழகத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும், முறையான மண்வள மேம்பாடு, பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்தல், பாரம்பரிய விதைகளை பயிரிடுதல் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு சிறந்த விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல், முதல் பரிசாக ரூ 15,000-ஆகவும், 2ம் பரிசாக ரூ.10,000 மும் வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான விவசாயிகள், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து வட்டார தோட்டக்கலை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் சூறாவளி காற்று., தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை?