தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு – மின்துறை அமைச்சர் விளக்கம்! அதிருப்தியில் பொதுமக்கள்!!

0

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, மின்வெட்டு அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த முக்கிய விளக்கம் ஒன்றை, சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்:

தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக, கோவை, திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து பல மணி நேரம் மின்வெட்டு இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், மின்வெட்டுக்கான காரணம் குறித்து, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதாவது மத்திய தொகுப்பில் இருந்து, மின்சாரம் கிடைக்காததால் தான் இந்த மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

தமிழகத்துக்கு தேவையான 72 ஆயிரம் டன் நிலக்கரி, பற்றாக்குறையாலும் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, நிலக்கரியை இறக்குமதி செய்ய தேவையான ஏற்பாடுகள் நடந்து வருவதாக உறுதி அளித்துள்ளார். மேலும் இந்த மின்வெட்டை சரி செய்ய 3000 மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்து வாங்க உள்ளதாகவும், இனி தொழிற்சாலைகளுக்கு தடையில்லாத மின் சேவை வழங்கப்படும் என்றும் விளக்கமளித்துள்ளார். இதனால், பொது மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here