இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்பு பரவல் தற்போது சரிவு நிலையை எட்டியுள்ளது. அதாவது, கடந்த வாரங்களாக தினசரி ஆயிரங்களாக பதிவு செய்யப்பட்டு வந்த கொரோனா பாதிப்பு இப்போது நூறுகளாக குறைந்துள்ளது.
அந்த வகையில், தமிழகத்திலும் கடந்த நாட்களில் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா தொற்று மூலம் தினசரி 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால், மக்கள் மீண்டுமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு…..,ஒருவேளை அதுக்கா இருக்குமோ….,
இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 462 பேர் சிகிச்சை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.