தமிழக கூட்டுறவு நகை கடனுக்கான வட்டி விகிதத்தில் அதிரடி மாற்றம் – அரசுக்கு முக்கிய கோரிக்கை!!

0
தமிழக கூட்டுறவு நகை கடனுக்கான வட்டி விகிதத்தில் அதிரடி மாற்றம் - அரசுக்கு முக்கிய கோரிக்கை!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம், வழங்கப்படும் நகைக்கடனுக்கான வட்டி விகிதத்தில், மாற்றம் கொண்டு வந்து புதிய விதிமுறைகளை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு கோரிக்கை :

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம், நகைகளை வைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 11% வட்டி விதிக்கின்றன. தமிழகத்தில், தற்போது வரை மூன்றடுக்கு முறை வட்டி விகிதம் பின்பற்றப்படுகிறது. அதாவது நபார்டு வங்கி மூலம் மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு அனுப்பப்பட்டு, 3வதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு பணம் அனுப்பப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் விதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், கேரளா போன்ற மாநிலங்களில், இரண்டடுக்கு முறை பின்பற்றப்படுவதால் அங்கு வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கிறது. தேசிய வங்கிகளில் கூட, வட்டி விகிதம் மிகவும் குறைவாகத்தான் உள்ளது.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.,,ஒரே நாளில் உச்சம்.,வேதனையில் நகைப்பிரியர்கள்!!

இதனை கருத்தில் கொண்டு தமிழக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இரண்டெடுக்கு முறையை கொண்டு வர வேண்டும் என்றும், பயிர் கடன் விதிமுறைகளில் மாற்றங்களை அறிவிக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here