பிரபல சர்ச்சைக்குரிய நடிகையான வனிதா சம்பந்தப்பட்ட முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வனிதா
வனிதா என்றாலே நமக்கு டக்குனு ஞாபகத்திற்கு வருவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். மூன்றாவது சீசன் இவரால் தான் களைகட்டவே ஆரம்பித்தது. வத்திக்குச்சி வனிதா என்ற பெயரும் பிக் பாஸ் வீட்டில் தான் அவருக்கு கிடைத்திருந்தது. அது ஒரு சம்பவம் என்றால் லாக்டவுன் சமயத்தில் அவர் அதை விட பெரிய சம்பவத்தை செய்திருந்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது தனது சமையல் நிகழ்ச்சிக்கு கேமரா மேனாக இருந்த பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டார். அது பெரும் சர்ச்சையை தான் ஏற்படுத்தியது. இந்த திருமணத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பு குவிந்தது. பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் போலீசில் புகார் அளித்திருந்தார். இப்படி பிரச்சனைகள் வலுக்க அடுத்த இரண்டு மாதங்களில் பீட்டர் பாலை வனிதா விவாகரத்து செய்து விட்டார்.
அதாவது அப்பொழுது தான் வனிதாவிற்கு பீட்டர் பால் குடிகாரன் என்ற உண்மையே தெரிய வந்துள்ளது. இப்படி இருக்க இப்பொழுது தனது வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பீட்டர் பால் மீண்டும் முதல் மனைவியான எலிசபெத்துடன் இணைந்து வாழ்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.