பறக்கும் ரயில் நிலையங்கள் மெட்ரோவாக மாற்றம்?? தமிழக அரசு எடுக்க இருக்கும் அதிரடி திட்டங்கள் இதோ!! 

0
பறக்கும் ரயில் நிலையங்கள் மெட்ரோவாக மாற்றம்?? தமிழக அரசு எடுக்க இருக்கும் அதிரடி திட்டங்கள் இதோ!! 

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்னரே கடந்த 1997 ம் ஆண்டு முதல் பறக்கும் ரயில் சேவையை சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை – வேளச்சேரியில் செயல்பட்டு வரும் இந்த பறக்கும் ரயில் சேவையை தமிழக அரசு முழுமையாக கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த ரயில் சேவையை கையகப்படுத்தியவுடன் மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்றி அமைக்க தமிழக அரசு திட்டங்கள் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சென்னை கடற்கரை – வேளச்சேரிக்கு இடையே உள்ள ரயில் நிலையங்களில் வணிக வளாகங்கள், உணவகம் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்த பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

சமையல் எண்ணெயில் பறந்த விமானம்…, ஆராய்ச்சியாளர்கள் படைத்த புதிய சாதனை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here