தமிழகத்தில் ஏழை எளியோர்களுக்கும் உயர்தரமான மருத்துவ சிகிச்சைகளை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூபாய் 5 லட்சம் வரையில் மருத்துவ வசதிகள் பெற வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இதுவரை தமிழகத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். மேலும் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1500 மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் படி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.