மெட்ரோ பயணிகளே…, மேலும் 3 பகுதிகளில் ரயில் சேவை நீட்டிப்பு?? நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
மெட்ரோ பயணிகளே..., மேலும் 3 பகுதிகளில் ரயில் சேவை நீட்டிப்பு?? நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
மெட்ரோ பயணிகளே..., மேலும் 3 பகுதிகளில் ரயில் சேவை நீட்டிப்பு?? நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் முதன் முதலாக சென்னையில் சிறப்பாக செயல்பட்டு வருவதை அடுத்து, மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், சென்னையின் முக்கிய பகுதிகளில் மட்டும் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன்படி, சென்னை புறநகர் பகுதிகளிலும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி வரையிலான 3வது வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரையும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தடத்தை பரந்தூர் வரையிலும், மாதவரம், கோயம்பேடு, சோழிங்கநல்லூர் வரை உள்ள 5வது வழித்தடத்தை ஆவடி வரையிலும் நீட்டிக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான தீர்க்கமான முடிவை எடுக்க தமிழக அரசிடம் மெட்ரோ நிர்வாகம் ஒப்புதல் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மக்களே உஷார்…,நாளைக்கு இந்த பகுதியில் பவர் கட்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here