தமிழகத்தில் மீண்டும் உயரும் பேருந்து கட்டணங்கள் – விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ உத்தரவு! பொதுமக்கள் பீதி!!

0
தமிழகத்தில் மீண்டும் உயரும் பேருந்து கட்டணங்கள் - விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ உத்தரவு! பொதுமக்கள் பீதி!!
தமிழகத்தில் மீண்டும் உயரும் பேருந்து கட்டணங்கள் - விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ உத்தரவு! பொதுமக்கள் பீதி!!

தமிழகத்தில், தொலைதூரப் பயணம் பேருந்துகளுக்கான கட்டண உயர்வு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அதிரடி:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பால் மற்றும் மின் கட்டணங்கள் உயர்த்த படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில். இது குறித்து பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு, பொது மக்களை பாதிக்காத வகையில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என தெரிவித்தார். ஆனால், இது எப்படி சாத்தியமாகும் என எதிர்க்கட்சிகள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர், தொலைதூர பயணம் பேருந்து கட்டண உயர்வு பட்டியல், அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த கட்டண உயர்வு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் கட்டண விகிதத்தை ஆராய்ந்து உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here