தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த பணியாளர்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை மாநில அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வணிக நிறுவனத்திலும் 150 பேர் வரையிலான பணியாளர்கள் பணிபுரிந்தால், அவர்களுக்கு முதலுதவி பெட்டியை தனித்து தெரியும் படியான இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
Enewz Tamil WhatsApp Channel
இதில் சிறு காயங்களுக்கான அனைத்து மருந்துகளும், மருத்துவ கருவிகளும் இடம்பெற்றிறுப்பதோடு உரிய முறையில் பராமரிக்கவும் வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருவதால், பணியாளர்கள் பலரும் அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.