தமிழகத்தில் தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்கள் இணைந்த ஆசிரியர் கூட்டுக்குழு (டிட்டோ ஜாக்) இன்று (அக்டோபர் 13) சென்னையில் போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தனர். இதில் எமிஸ் பதிவேற்றத்தில் இருந்து விடுவித்தல், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 12) அமைச்சர் அன்பில் மகேஷ், டிட்டோ ஜாக் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
Enewz Tamil WhatsApp Channel
அதில் ஆசிரியர்களின் 11 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக டிட்டோ ஜாக் உறுப்பினர் சேகர் கூறியுள்ளார். அதிலும் ஆசிரியர்களின் முதன்மை கோரிக்கையான எமிஸ் பதிவேற்ற பணி நவம்பர் 1 முதல் ரத்து செய்யப்படுவதற்கான அரசாணை இந்த வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.