கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வரும் சம்பவம் உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் தனது தங்கையையும், சகோதரியின் கணவனையும் இழந்து விட்டதாக சீரியல் நடிகை மதுரா நாயக் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசியதாவது, இஸ்ரேலில் நடக்கும் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்காக நான் வெட்கப்படுகிறேன்.
Enewz Tamil WhatsApp Channel
நான் ஒருபோதும் வன்முறையை ஆதரிக்க மாட்டேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் உலக மக்கள் இஸ்ரேல் மக்கள் பக்கம் நில்லுங்கள். இப்படி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் கொடூரமான முகத்தை மக்கள் தற்போது பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் என எமோஷனல் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவப்பட்டு வருகிறது. இவர் பிரபல சீரியலான நாகினி நாடகத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: இஸ்ரேலில் இருந்து தன் தேசம் திரும்பும் இந்தியர்கள்., எத்தனை பேர் தெரியுமா?