தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விரைவில் தொடங்க இருப்பதால், மாணவர்கள் பலரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, கடந்த பிப்.12 முதல் பிப்.17ஆம் தேதி வரையிலும் நடைபெற்றதால், நேற்று (பிப்.20) பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நாளை மறுநாள் பிப்.23) முதல் தொடங்க உள்ளது. இதனால் பல்வேறு முன்னேற்பாடுகளை, அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 10 ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வை பிப்.29 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.