தமிழகத்தில் இப்போது 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் விடைத்தாள் திருத்தம் பணி நடைபெற்று அதற்கான முடிவுகள் வெளியிடப்படும். இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது 10,11,12 வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை எப்போது துவங்கி முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தாளை ஏப்ரல் 13-ல் துவங்கி 22 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதேபோன்று 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வு தாளை ஏப்ரல் 1ம் தேதி துவங்கி 13ஆம் தேதி முடிக்க வேண்டும். 11ஆம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கு, ஏப்ரல் 6ம் தேதியும், நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு, ஏப்ரல் 15 ம் தேதி துவங்கி 22 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.