திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு., அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு!!!

0
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு., அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு!!!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு., அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு!!!

உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், கார்த்திகை மாத தீப திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். நடப்பாண்டில் கடந்த நவ.17 ஆம் தேதி முதல் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. இந்த திருவிழாவின் உச்சபட்சமாக வருகிற நவ. 26 ஆம் தேதி திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த நிகழ்வை கண்டு மலையை சுற்றி கிரிவலம் செல்ல எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள்.

Enewz Tamil WhatsApp Channel 

இதனை கருத்தில் கொண்டு நவ. 25 முதல் நவ. 27ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதேபோல் திருவண்ணாமலையில் பக்தர்கள் நெரிசலை தவிர்க்க 9 தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் கிரிவல பாதையில் சென்று திரும்ப 40 கட்டணமில்லா சிற்றுந்து ஆகிய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்களுக்கு சிறப்பு சலுகை.., இது தெரிஞ்சா நீங்க அரசு வேலைக்கு ஓகே ஆகிடுவீங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here