டிக்டாக் பிரபலமான ரவுடி பேபி சூர்யா மீது செய்தியாளரை அவதூறாக பேசி கொலைமிரட்டல் வீடியோ வெளியிட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரவுடி பேபி சூர்யா
திருப்பூர் மாவட்டத்தில் அய்யம்பாளையத்தில் குடியிருந்து வருபவர் சுப்பு லட்சுமி. இவரை டிக்டாகில் ரவுடி பேபி சூர்யா என்றே அனைவரும் அழைத்து வருகின்றனர். மேலும் இதனை தொடர்ந்து இவர் சிங்கப்பூர்க்கு சென்றிருந்த வேளையில் கொரோனாவால் பொது முடக்கம் செய்யப்பட்டது. இதனால் அவர் அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சிறப்பு விமானம் மூலம் ஜூன் 16 இல் தமிழகத்திற்கு வந்து சேர்ந்த சூர்யா திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கொரோனா பீதியில் சுகாதார துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் இவரைம் ஆம்புலன்ஸில் அழைத்து செல்ல முயற்சித்தனர். ஆனால் அவரோ தான் கோவையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே தண்னி அனுப்பி வைத்தனர் எனவே ஆம்புலன்ஸில் என்ற மாட்டேன் என்றும் இரு சக்கர வாகனத்திலேயே வருவதாக தெரிவித்தார்.
வழக்குப்பதிவு
பிறகு தான் அங்கே ஏசி அறையிலேயே இருந்து விட்டேன் இங்கு அடிக்கும் வெயிலில் எனக்கு கொரோனா பரவி விடுமோ என்று பயமாக உள்ளதாகவும் தனக்கு அரசு மருத்துவமனையில்தனி அரை உணவு வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த வாக்குவாதத்தில் மருத்துவமனையில் கொரோனா மாதிரி சேகரிப்பு பணி செய்ய முடியாமல் போனது. திரும்பவும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பட்டது. இது தொடர்பாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி குறித்து அவதூறு பரப்பும் விதமாக கொலை மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அந்த நிருபர் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் சூர்யா மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(b), 500 and 506(2) என்ற ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்