ரயில், பேருந்து, விமானம் போக்குவரத்து சேவையில் பயணிப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பயணத்தின் போது சில பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்போது விமானத்தின் விதிகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி வரும் நாட்களில் கீழ் குறிப்பிட்ட பொருட்களை விமானத்தில் எடுத்து சென்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளனர்.அதன்படி இனி வரும் நாட்களில் விமானத்தில் வெற்றிலை, மூலிகை செடிகள், யானைத் தந்தம், மீன்பிடி வலைகள், அச்சிடப்பட்ட பொருட்கள், எண்ணெய் ஓவியங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள், கல் சிற்பங்கள், வீட்டில் சமைத்த உணவு, அசைவ உணவு, கோகோயின், ஹெராயின், பாப்பி போன்ற பொருட்களும் எடுத்துச் செல்லக்கூடாது என குறிப்பிட்டுள்ளனர்.