தமிழகத்தில் கோடை காலத்திற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியான இடங்களுக்கு சுற்றுலா செல்ல பலரும் தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப ஊட்டியில் சீசன் தொடங்கி உள்ளதால் மேட்டுப்பாளையம் to ஊட்டி செல்லும் மலை ரயிலில் பயணம் செய்ய வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கருத்தில் கொண்டு சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது மேட்டுப்பாளையம் – ஊட்டி மற்றும் ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே இன்று (மார்ச் 29) முதல் ஜூலை 1ஆம் தேதி வரை, வாரந்தோறும் வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கோடைகால சிறப்பு மலை ரெயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!