நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் தொடங்க இருப்பதால், அரசியல் கட்சிகள் பலவும் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி மாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதன்படி “இந்தியாவின் மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும். எனவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
Enewz Tamil டெலிக்ராம்