தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருவதால், பல்வேறு அரசியல் கட்சிகளின் வாக்குறுதியாக மாறி வருகிறது. அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்களவை தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார்.அதில் “பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூ.1,000 மகளிர் உரிமை தொகை வழங்கப்படாது என ஒரு சில கட்சிகள் கூறுவது முற்றிலும் தவறு. நாங்கள் வந்தால் உரிமை தொகையை ரூ.1,500ஆக உயர்த்தி வழங்குவோம்.” என வாக்குறுதி அளித்துள்ளார்.
பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்யணுமா? இந்த இணையதளம் தான்? வெளியான முக்கிய தகவல்!!!