SBI வாடிக்கையாளர்கள் இனிமேல் குறைந்தபட்ச இருப்புத்தொகை இவ்வளவு தான் வைக்கவேண்டும் என்ற அவசியமில்லை என SBI வங்கியின் தலைவர் ரஜ்னீஸ்குமார் அறிவித்துள்ளார். இந்த அறிவிக்கையினால் SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
SBI புதிய அறிக்கை..!
SBI வங்கியில் முன்னதாக அறிவிக்கப்பட்ட அறிக்கையில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட இருப்புத்தொகை இவ்வளவு இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பெருநகரங்களில் குறிப்பிட்ட இருப்புத்தொகை ( 5 ஆயிரம் ) ஆகவும்
மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட இருப்புத்தொகை ( 3 ஆயிரம் ) ஆகவும்
இருந்து வந்த நிலையில் வாடிக்கையாளர்கள் மிக சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பிட்ட இருப்புத்தொகை இல்லாத வங்கி கணக்குகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது வந்த அறிக்கையின் படி SBI வங்கியின் தலைவர் ரஜ்னீஸ்குமார் இனிமேல் குறிப்பிட்ட இருப்புத்தொகை இவ்வளவுதான் வைக்கவேண்டிய அவசியமில்லை என அறிவித்துள்ளார். இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |