தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய தொகுதி 2 மற்றும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான ஜூனியர் இளநிலை கட்டடக் கலைஞர் (Junior Architect) ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களில் எதிலும் உண்மை இல்லை எனவும் இந்த தேர்வுகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
குரூப் 2 தேர்வில் 1997ல் பிறந்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் இது குறித்து ஆய்வு செய்த அந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே ஏற்கனவே வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அண்மையில் நடந்து முடிந்த ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான ஜூனியர் இளநிலை கட்டடக் கலைஞர் (Junior Architect) தேர்வில் நேர்முக தேர்விற்கு அழைக்கப்பட்ட 39 பேரில் 31 பேர் சென்னை மையத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் உண்மை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 31 தேர்வர்களும் 3 வெவ்வேறு தேர்வுக்கூடங்களில் 21 வெவ்வேறு தேர்வு மையங்களில் தேர்வு எழுதி உள்ளனர். எனவே இந்த முறைகேடு புகாரில் உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |