விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் கடந்த 12ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். தற்போது அதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை.
தேர்தல் முடிவுகள் குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் தேர்தல் ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது. தேர்தல் ஆணையம் விரும்பினாலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியாது. தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளது.
Enewz Tamil டெலிக்ராம்
T20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய ஜாம்பவான் அணி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!