தமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பாஜக என மும்முனை போட்டிகள் நிலவுவதால், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக தி.மு.க. மீது பாஜக வேட்பாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் கச்சத்தீவை மீட்பது குறித்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது இலங்கையின் ஒரு பகுதியாக உள்ள கச்சத்தீவை திருப்பித் தருமாறு இந்தியா இதுவரை கேட்கவில்லை. அப்படி திருப்பி கேட்கும் பட்சத்தில், இலங்கை தக்க பதிலளிக்கும்.” என தெரிவித்துள்ளார்.