இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 14 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் மூலம் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார். அதாவது இந்தியன் பிரிமியர் லீக் வரலாற்றில் அதிக முறை (17) டக் அவுட் ஆகி முதலிடத்தை பெற்றுள்ளார். மோசமான சாதனை படைத்த ரோஹித் தொடர்பாக இணையத்தில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன. ஐபிஎல் தொடரில் அதிக டக் ஆன வீரர்கள் பட்டியலை கீழ் காணலாம்.
ஐபிஎல் தொடரில் அதிக டக் ஆனவர்கள்:
17 – ரோகித் சர்மா
17- தினேஷ் கார்த்திக்
15 – மந்திப் சிங்
15 – சுனில் நரேன்
15 – பியூஷ் சாவ்லா
Enewz Tamil WhatsApp Channel
“கச்சத்தீவை இந்தியா திருப்பிக் கேட்டால் தக்க பதில் கிடைக்கும்”., இலங்கை அமைச்சர் பகீர்!!!