சூரிய கிரகணத்தின் ஆற்றல் கொரோனா வைரஸை செயலிழக்க செய்யும் – சென்னை விஞ்ஞானி..!

0
sundar krishnan
sundar krishnan

கொரோனா வைரஸ் தற்போது உலக பணக்கார நாடுகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. தற்போது இந்த கொரோனா வைரஸ் சூரிய கிரகணத்தின் போது செயலிழக்கும் என சென்னையை சேர்ந்தா விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

சூரிய கிரகணம்

சென்னையை சேர்ந்த சுந்தர் கிருஷ்ணன் என்பவர் அணு மற்றும் புவியியல் தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்டு வருபவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் 26 இல் நிகழ்ந்த சூரிய கிரகணத்தில் வெளியான ஆற்றல் காரணமாக அணுவில் பிளவு ஏற்பட்டு பரிணாம வளர்ச்சியில் கொரோனா வைரஸ் உருவானதாக கூறினார்.

கொரோனா

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, “கொரோனா வைரஸ் 2019ம் ஆண்டு டிசம்பரில் தோன்றி, மனிதர்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கிடையே நான் மேற்கொண்ட ஆய்வுகளில் கடந்த டிசம்பர் 26 அன்று தோன்றிய சூரிய கிரகணத்திற்குப் பிறகு நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்கள் தன்னை மறு சீரமைத்துக் கொண்டுள்ளது தெரியவந்தது. டிசம்பர் 26, சூரிய கிரகணத்தின்போது வெளியான ஆற்றல் பூமியிலும் விழுந்தது. இந்த ஆற்றல் காரணமாக பூமியின் வலிமை மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

சூரிய கிரகணம்
சூரிய கிரகணம்

இந்த மறுசீரமைப்பு காரணமாகப் பூமியின் மேல் பரப்பில் இந்த கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம். அந்த கிரகணத்தின்போது வெளியான ஆற்றல் காரணமாக ஏற்பட்ட சேர்க்கைகள், அணுக்களின் பிளவு காரணமாக குறிப்பிட்ட நியூக்ளியஸ் உருவாக்கம் தொடங்கியிருக்கலாம். இப்படி வளிமண்டலத்தில் ஏற்பட்ட அணுசக்தி தொடர்பு, உயிரியக்கத்தின் கருவாக அமைந்திருக்கலாம். இதன் மூலம் கொரோனா வைரசின் உயிர் மூலக்கூறு கட்டமைப்பின் பிறழ்வு நடந்திருக்க வாய்ப்புள்ளது,” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த வைரஸ் சீனாவில் தான் தோன்றியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரின் கணிப்பு சரியாக இருந்தால் இந்த சூரிய கிரஹணம் நமக்கு நமக்கு திருப்பு முனையாக அமையும் என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here