12ம் வகுப்பிற்கு 27ம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன்..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, 12ம் வகுப்பிற்கு 27ம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும், தனியார் பள்ளிகளின் உரிமம் புதுப்பிப்புக் காலம் ஊரடங்கை கருத்தில் கொண்டு ஓராண்டில் இருந்து 2 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
இன்றைய தலைப்பு செய்திகளின் சுருக்கம்..!!
மேலும் தமிழகத்தில் 6 ஆயிரத்து 19 பள்ளிகளில் இலவச கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் கணினி வழியாக பாடங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் நிலை 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.