பேட்மிண்டன் தொடரில் ஏமாற்றிய பி வி சிந்து…, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிய சாய்னா நேவால்!!

0
பேட்மிண்டன் தொடரில் ஏமாற்றிய பி வி சிந்து..., அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிய சாய்னா நேவால்!!
பேட்மிண்டன் தொடரில் ஏமாற்றிய பி வி சிந்து..., அடுத்தச் சுற்றுக்கு முன்னேறிய சாய்னா நேவால்!!

தாய்லாந்தில் கடந்த மே 30 ம் தேதி முதல் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இடையே ஓபன் பேட்மிண்டன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரை முடித்த கையோடு இந்தியாவின் முன்னணி வீரர்களான பி வி சிந்து, சாய்னா நேவால், லக்ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர்கள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த தொடருக்கான முதல் சுற்றுக்கான, மகளிர் ஒற்றையர் பிரிவில் பி வி சிந்து கனடாவின் மிசெல்லி லீயை எதிர்கொண்டார். இதில், முதல் செட்டை (8-21) இழந்த பி வி சிந்து, 2வது செட்டை போராடி (21-18) வென்றார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 வது செட்டில் மிச்செலி லீ 21-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற 2-1 என பி வி சிந்து தோல்வியை தழுவினார். மற்றொரு போட்டியில், கனடா வீராங்கனையை எதிர்த்து விளையாடிய சாய்னா நேவால் 21-13, 21-7 என தொடர்ந்து 2 செட்களை கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

குணசேகரன் ஜோலி முடிஞ்சிச்சு., கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனீங்க., டைரக்டர் வச்ச செம ட்விஸ்ட்., அனல் பறக்கும் எதிர்நீச்சல்!!!!

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்ஷ்யா சென் சீன தைபே வீரரை (21-23, 21-15, 21-15) 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2 வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இவரை போல, மற்ற வீரர்களான ஜார்ஜ், அஷ்மிதா சாலிஹா மற்றும் சி. ஷெட்டி, எஸ். ரங்கிரெட்டி ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here