எதிர்நீச்சல் சீரியலில் இத்தனை நாள் ஆதிரையின் கல்யாண விஷயம் தான் மாஸ் எபிசோடாக ஒளிபரப்பாகிய நிலையில் இப்போது ஜீவானந்தம் என்ட்ரி அனைவரையும் இன்னும் வியப்படைய வைத்துள்ளது. ஒரு புறம் அப்பத்தா கண் முழிக்கும் போதெல்லாம் ஜீவானந்தம், ஜீவானந்தம் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் ஜனனியின் நண்பரும் ஜீவானந்தம் பற்றி தெரிந்து கொள்ள துடிக்கிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இப்படி ஜீவானந்தம் யார் என்று தெரியாமலையே இத்தனை நாள் சீரியல் ஒளிபரப்பாகியது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் டைரக்டர் திருச்செல்வன் தான் ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் டைரக்டரா இருக்கும் போதே சீரியல் படுபயங்கரமா போச்சு. இப்போ நாடகத்துக்குள்ளேயும் வந்து என்ன எல்லாம் பண்ண போறீங்க தெரியல என கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஒரு படத்துல அது இருந்தா போதும்., கவர்ச்சி காட்ட நான் ரெடி., துஷாராவின் தடால் பேட்டி!!
இந்நிலையில் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோட்டில் ஜீவானந்தம் தான் 40% ஷேரை வைத்துக்கொண்டு குணசேகரனுக்கு ஆட்டம் காட்டுவாராம். இவரை சமாளிக்க குணசேகரன் இல்லாத பித்தலாட்ட வேலை எல்லாம் செய்வாராம். ஆனா இதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத ஜீவானந்தம் குணசேகரனுக்கு டார்ச்சர் கொடுத்து தன் வழிக்கு கொண்டு வருவாராம். இது தான் அடுத்து வரும் எபிசோடில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.